ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

நிலா நிலா ஓடிவா, சாதரங்கம், பிங்கர் பிரிண்ட்ஸ், மீட் கியூட் உள்ளிட்ட பல வெப் தொடர்களில் நடித்துள்ள சுனைனா தற்போது நடித்துள்ள தொடர் 'இன்ஸ்பெக்டர் ரிஷி'. இதில் அவர் காட்டிலாகா அதிகாரி 'காத்தி' என்ற கேரக்டரில் நடிக்கிறார். கதையின் நாயகனாக அதாவது இன்ஸ்பெக்டர் ரிஷியாக நவீன் சந்திரா நடிக்கிறார். இவர்களுடன் கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 10 எபிசோட்கள் கொண்ட இந்த தொடர் வருகிற 29ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
காட்டுக்குள் திடீர் திடீரென மர்ம சாவுகள் நடக்கிறது. இறந்து போனவர்களை சுற்றி பூச்சிகள் கூடுகட்டுகிறது. எதனால் இப்படி நடக்கிறது என்பதை போலீஸ் அதிகாரி நவீன் சந்திராவும், காட்டிலாகா அதிகாரி சுனைனாவும் இணைந்து கண்டுபிடிப்பதுதான் கதை. திகில், மர்மங்கள் நிறைந்த பேண்டசி தொடராக உருவாகி உள்ளது.
இதில் நடித்திருப்பது பற்றி சுனைனா கூறும்போது "இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரில் வன அதிகாரி காத்தியின் பாத்திரத்தில் நடித்தற்காக மகிழ்ச்சியடைகிறேன். கதாசிரியர்கள் எனது கதாபாத்திரத்தை மிக நுணுக்கமாக செதுக்கியிருக்கிறார்கள், மேலும் காத்தியின் குணாதிசயங்கள் என்னுடன் ஆழமாக எதிரொலித்தன. செட்டில் இருந்த ஆதரவான சூழல், திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் இணைந்து, காத்தியின் மென்மையான மற்றும் கடுமையான ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்த அனுமதித்தது. இயற்கை, அமைதி மற்றும் மர்மம் நிறைந்த ஒரு உலகத்திற்கு பார்வையாளர்களை வெற்றிகரமாக இட்டுச் செல்வோம் என்று நான் நம்புகிறேன்”என்றார்.