300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‛கோட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று விஜய் கேரளாவிற்கு புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அதன் பிறகு படப்பிடிப்பு நடைபெற்ற மைதானத்தை நோக்கி விஜய் புறப்பட்டு சென்றபோது வழி நெடுகிலும் ரசிகர்கள் ‛தலைவா தலைவா' என்றபடி அவரை பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு நடைபெறும் இடத்தை அடைந்த விஜய், காரில் இருந்து இறங்கியபோது பெரிய அளவில் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த தள்ளுமுள்ளு காரணமாக விஜய்யின் கார் கண்ணாடி உடைந்து இருக்கிறது. ஒரு வழியாக விஜய்யின் பாதுகாப்பு படையினர் அவரை அங்கிருந்து மீட்டு சென்றுள்ளார்கள். இப்படி ரசிகர்கள் தனது கார் கண்ணாடியை உடைத்த போதும் அது குறித்து எந்த கோபத்தையும் வெளிப்படுத்தாத விஜய், ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு தான் இதற்கு காரணம். அவர்களின் அன்புக்கு நான் தலை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.