லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

இயக்குனரான சமுத்திரகனி தற்போது நடிப்பில் தான் பிஸியாக உள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்ரம் என தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ‛யாவரும் வல்லவரே' படம் நாளை(பிப்., 15) ரிலீஸாகிறது. முன்பை போல் படங்கள் இயக்காதது பற்றி சமுத்திரகனி ஒரு பேட்டியில் கூறும்போது, ‛‛அப்பா படத்தை எடுத்துவிட்டு அதை ரிலீஸ் செய்ய நான் பட்டபாடு எனக்கு மட்டும் தான் தெரியும். அதேமாதிரி தான் அடுத்த சாட்டை என்ற படத்தை எடுத்தோம். அதற்கும் இதே நிலை தான். படத்தை எடுக்கும்போது இருக்கும் மகிழ்ச்சி வெளியிடும்போது இல்லை. அதனால் தான் படம் இயக்குவதை நிறுத்திவிட்டு நடிப்புக்கான வாய்ப்பு இருக்கும் இடத்தில் வேலை பார்க்கிறேன். மலையாள படங்கள் இங்கு ஓடுகின்றன. தமிழ் சினிமாவிலும் அதுபோன்ற நல்ல படங்கள் உள்ளன. சிறு பட்ஜெட் படங்களையும் வெளியிட உதவுங்கள்'' என்றார்.