நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
நடிகை வரலட்சுமிக்கும், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் லிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து வரலட்சுமி திருமணம் செய்யும் தொழில் அதிபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றும், 15 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகின. இது சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வரலட்சுமி மகளிர் தினத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛‛மற்றவர்கள் என்னை பற்றி விமர்சிப்பது குறித்து நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. பெண்கள் எப்போதுமே மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும். உங்களுக்காக நீங்கள் வாழுங்கள். இதை செய்யாதே அதைச் செய்யாதே என்று சொல்பவர்கள் யாரும் நம்முடைய வாழ்க்கை முழுவதும் பயணிக்க போவதில்லை. நீங்கள் மட்டும் தான் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு துணையாக நிற்கப் போகிறீர்கள்'' என தெரிவித்துள்ளார் வரலட்சுமி.