மலையாளத்தில் அறிமுகமாகும் பிரீத்தி முகுந்தன் | ‛மதராஸி' படம் செப்.5ம் தேதி திரைக்கு வருகிறது | குட் பேட் அக்லி : ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் | 4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' | தூசி தட்டப்படும் 'இடி முழக்கம்' | எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் | அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம் |
தமிழ்நாட்டை சேர்ந்த தீப்ஷிகா தற்போது தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது ஆரி நடிக்கும் 'ரிலீஸ்' படத்தில் அவரது ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆராத்யா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்குகிறார். மனோ கிரியேஷன் சார்பில் ராஜா தயாரிக்கிறார். எஸ்.சங்கர் ராம் இசை அமைக்கிறார். லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது.
படம் பற்றி இயக்குனர் சுந்தரபாண்டி கூறும்போது “சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில் உருவாகிறது. சென்னையை ஒட்டி, மஹேந்திரா சிட்டி பகுதியில் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.