மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ்நாட்டை சேர்ந்த தீப்ஷிகா தற்போது தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது ஆரி நடிக்கும் 'ரிலீஸ்' படத்தில் அவரது ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆராத்யா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்குகிறார். மனோ கிரியேஷன் சார்பில் ராஜா தயாரிக்கிறார். எஸ்.சங்கர் ராம் இசை அமைக்கிறார். லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது.
படம் பற்றி இயக்குனர் சுந்தரபாண்டி கூறும்போது “சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில் உருவாகிறது. சென்னையை ஒட்டி, மஹேந்திரா சிட்டி பகுதியில் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.