எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
காமெடியனாக நடித்து வந்த வடிவேலு ஒரு கட்டத்தில் கதையின் நாயகனாக உருவெடுத்த போது எதிர்பாராத விதமாக அரசியல் களத்துக்குள் வந்தார். அப்போது விஜயகாந்துக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் தீவிரமான பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் அவர் பிரச்சாரம் செய்த திமுக தோல்வி அடைந்ததை அடுத்து வடிவேலுவின் சினிமா மார்க்கெட்டும் டவுன் ஆனது. இதன் காரணமாக பல ஆண்டுகளாக எந்த படத்தில் நடிக்காமல் இருந்தவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கினார். அப்போது அவர் கதையின் நாயகனாக நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படம் தோல்வி அடைந்த போதும், குணச்சித்ர வேடத்தில் நடித்த மாமன்னன் படம் வெற்றியை கொடுத்தது.
இந்த நிலையில் வடிவேலு திமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. அதுகுறித்து அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‛‛அரசியலுக்கு வரும் எந்த எண்ணமும் என்னிடத்தில் இல்லை. நடிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்தப் போகிறேன்'' என்று பதில் கொடுத்து இருக்கிறார் வடிவேலு.