மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் | எங்களுக்குள்ளும் சண்டை வரும், பிரிவை யோசிக்க வைத்துள்ளது : ரம்பா | ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது ஏன்? 30 ஆண்டுகள் கழித்து காரணம் சொன்ன ரஜினி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் தலையிட்ட இலங்கை அரசு | பிளாஷ்பேக்: 'சந்திரலேகா'வை தேடி அலைந்த எழுத்தாளர்கள் | அன்னை இல்லத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை: ராம்குமார் பிரமாண மனு தாக்கல் | பாவனா தயாரிக்கும் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் அனிமல் பட இசையமைப்பாளர் | போதை வழக்கில் முன்ஜாமின் கோரிய மனுவை வாபஸ் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் |
நடிகர் அஜித் திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‛விடாமுயற்சி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருடன் த்ரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆக்ஷன் படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் அஜர்பைஜான் நாட்டில் படமாகி வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்புக்கு சற்று ஓய்வு கிடைத்த நிலையில் சென்னை திரும்பினார் அஜித். தனது மகனின் பிறந்தநாளையும் கொண்டாடினார். விரைவில் ‛விடாமுயற்சி' படப்பிடிப்புக்காக மீண்டும் அஜர்பைஜான் பறக்க உள்ளார்.
இந்நிலையில் அஜித் திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது வழக்கமான உடல் பரிசோதனை என கூறுகிறார்கள். மீண்டும் படப்பிடிப்புக்கு வெளிநாடு செல்ல உள்ளதால் உடல் பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலையோ அல்லது நாளைக்குள் வீடு திரும்புவார் என்கிறார்கள்.