ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
பாகுபலி, ஆர் ஆர் ஆர் படங்களை அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் ராஜமவுலி. இந்த படத்திற்கும் அவரது தந்தையான விஜயேந்திர பிரசாத்தே கதை எழுத, கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தில் இந்திய அளவில் உள்ள பல பிரபல நடிகர் நடிகைகள் மட்டுமின்றி இந்தோனேசியா நாட்டைச் சார்ந்த நடிகர்களும் நடிக்க உள்ளார்கள்.
இந்த நிலையில் இப்படத்திற்கு, ‛மகாராஜா' என்று டைட்டில் வைத்திருப்பதாக ஒரு செய்தி வெளியானது. இந்நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில் அந்த செய்தியை மறுத்திருக்கிறார் ராஜமவுலி. அதோடு, ‛‛மகேஷ் பாபுவை வைத்து நான் இயக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்திற்கு எந்த மாதிரி டைட்டில் வைக்கலாம் என்று ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் டைட்டில் முடிவாகவில்லை,'' என்றும் அவர் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.