நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! |

பாகுபலி, ஆர் ஆர் ஆர் படங்களை அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் ராஜமவுலி. இந்த படத்திற்கும் அவரது தந்தையான விஜயேந்திர பிரசாத்தே கதை எழுத, கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தில் இந்திய அளவில் உள்ள பல பிரபல நடிகர் நடிகைகள் மட்டுமின்றி இந்தோனேசியா நாட்டைச் சார்ந்த நடிகர்களும் நடிக்க உள்ளார்கள்.
இந்த நிலையில் இப்படத்திற்கு, ‛மகாராஜா' என்று டைட்டில் வைத்திருப்பதாக ஒரு செய்தி வெளியானது. இந்நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில் அந்த செய்தியை மறுத்திருக்கிறார் ராஜமவுலி. அதோடு, ‛‛மகேஷ் பாபுவை வைத்து நான் இயக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்திற்கு எந்த மாதிரி டைட்டில் வைக்கலாம் என்று ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் டைட்டில் முடிவாகவில்லை,'' என்றும் அவர் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.




