பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் தெகிடி. ஜனனி நாயகியாக நடித்த இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருந்தார். இப்படம் திரைக்கு வந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தெகிடி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகிறது என்று சோசியல் மீடியாவில் ஒரு அப்டேட் கொடுத்திருக்கிறார் அசோக் செல்வன். அதனால் தெகிடி இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பது தெரியவந்துள்ளது. முதல்பாகத்தில் பணியாற்றியவர்களே இரண்டாம் பாகத்திலும் தொடருவார்கள் என கூறப்படுகிறது. அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில், சபாநாயகன், ப்ளூ ஸ்டார் போன்ற படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்து குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றன.