அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத் ராஜ் தற்போது இயக்கியிருக்கும் படம் கொட்டுக்காளி. சூரி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் கடந்த ஆண்டு வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து தற்போது படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அதோடு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு வருகிறது.
74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 15 முதல் 25 வரை ஜெர்மனியில் நடைபெற்றது. அப்போது கொட்டுக்காளி படம் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. படத்தை பார்த்த பலரும் படக்குழுவினரை பாராட்டினர். இதுதொடர்பான வீடியோவை பதிவிட்டிருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயன், ‛‛பெர்லினாலேயில் எங்கள் கொட்டுக்காளியின் முதல் சர்வதேச அரங்கிற்கு நன்றி. மேலும், நம்ப முடியாத சில பதில் எங்கள் இதயங்களில் ஒரு நீடித்த முத்திரையை பதித்துள்ளது. மறக்க முடியாத தருணங்களுக்கு நன்றி'' என அவர் பதிவிட்டுள்ளார்.