நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத் ராஜ் தற்போது இயக்கியிருக்கும் படம் கொட்டுக்காளி. சூரி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் கடந்த ஆண்டு வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து தற்போது படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அதோடு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு வருகிறது.
74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 15 முதல் 25 வரை ஜெர்மனியில் நடைபெற்றது. அப்போது கொட்டுக்காளி படம் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. படத்தை பார்த்த பலரும் படக்குழுவினரை பாராட்டினர். இதுதொடர்பான வீடியோவை பதிவிட்டிருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயன், ‛‛பெர்லினாலேயில் எங்கள் கொட்டுக்காளியின் முதல் சர்வதேச அரங்கிற்கு நன்றி. மேலும், நம்ப முடியாத சில பதில் எங்கள் இதயங்களில் ஒரு நீடித்த முத்திரையை பதித்துள்ளது. மறக்க முடியாத தருணங்களுக்கு நன்றி'' என அவர் பதிவிட்டுள்ளார்.