பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
பருத்தி வீரன் படத்திற்காக தேசிய விருது பெற்றவர் பிரியாமணி. தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு பக்கம் சென்றவர் அங்கு பிசியான நடிகை ஆனார். தற்போது பாலிவுட் படங்கள், வெப் சீரிஸ்களில் கலக்கி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஜவான், ஆர்டிகள் 370, தெலுங்கில் வெளியான பாமகலாபம் 2 படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக பிரியாமணி மாறி இருக்கிறார்.
இந்த நிலையில் பிரியாமணி 'மெர்சிடைஸ் பென்ஸ் ஜிஎல்சி' என்ற நவீன ரக சொகுசு காரை வாங்கி உள்ளார். இதன் மதிப்பு 75 லட்சம். குடும்பத்தினருடன் ஷோரூமுக்கு சென்று காரை வாங்கிய அவர் தனது மகிழ்ச்சியை அங்கு கேக் வெட்டி கொண்டாடினார். சமீபத்தில் பிரியாமணி ஐதராபாத்தில் வீடு வாங்கியது குறிப்பிடத்தக்கது. பிரியாமணிக்கு பெங்களூரிலும் சொந்த வீடு உள்ளது.