திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
தமிழ் சினிமா உலகின் டாப் நடிகர்களில் முதன்மையானவராக இருக்கும் ரஜினிகாந்த் இன்று அவரது 43வது திருமண நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினி, லதா தம்பதியினரின் இளைய மகளும், இயக்குனருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், பெற்றோரின் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து நெகிழ்வான பதிவொன்றையும் பதிவிட்டுள்ளார்.
“இணைபிரியாத 43 வருடங்கள்… எனது செல்லங்கள் அம்மா, அப்பா. எப்போதும் ஒருவருக்கொருவர் திடமாக நிற்பார்கள். 43 வருடங்களுக்கு முன்பு அவர்கள் பரிமாறிக் கொண்ட செயின், மோதிரம் ஆகியவற்றுடன் ஒவ்வொரு வருடமும் அம்மா மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் இருவரையும் அதிகமாக நேசிக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.