திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
2024ம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதம் இன்னும் இரண்டு நாட்களில் முடியப் போகிறது. மார்ச் மாதம் வந்தாலே புதிய படங்களின் வருகை குறைந்துவிடும். பள்ளிகளில் முழு ஆண்டுத் தேர்வுகள் ஆரம்பமாகிவிடும். இருப்பினும் வரும் மார்ச் 1ம் தேதி “அதோ முகம், ஜோஷ்வா, மங்கை, போர், சத்தமின்றி முத்தம் தா, தோழர் சேகுவேரா” ஆகிய படங்கள் வெளிவரும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இவற்றில் 'மங்கை' படம் வருமா என்பது சந்தேகம்தான். அப்படத்தைத் தயாரித்த திமுக பிரமுகரான ஜாபர் சாதிக் என்பவர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார். அவர் தலைமறைவாகியுள்ளதால் அப்படம் வெளிவருவது சந்தேகமே.
சத்யராஜ் நடித்துள்ள 'தோழர் சேகுவேரா' என்ற படமும் மார்ச் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் படம் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.
அதனால், 'அதோ முகம், ஜோஷ்வா, போர், சத்தமின்றி முத்தம் தா' ஆகிய நான்கு படங்கள் மட்டுமே வெளியாக வாய்ப்புள்ளது.
கடந்த வாரம் வெளியான படங்களுக்கு வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு இல்லாத நிலையில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் நிலை என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.