ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
நடிகர் தனுஷ் ஏற்கனவே 'ப பாண்டி' என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். அந்த படம் வரவேற்பை பெற்ற நிலையில் சில வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் டைரக்சனில் இறங்கியுள்ள தனுஷ், ‛ராயன்' என்கிற படத்தை இயக்கி தானே கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இது தனுஷின் ஐம்பதாவது படமாக உருவாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன.
நடிகர்கள் எஸ்.ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் செல்வராகவன், துஷாரா விஜயன் ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ள நிலையில் தற்போது ‛சூரரைப்போற்று' படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளியும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதாக அறிவித்துள்ளனர்.
ராயன் படத்தில் அவரது கதாபாத்திர போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, “சூப்பர் டேலண்ட் கொண்ட அபர்ணா பாலமுரளி” என குறிப்பிட்டு அவரை ராயன் படத்திற்கு வரவேற்றுள்ளார் தனுஷ்.
இந்த படத்தில் இணைந்தது குறித்து அபர்ணா பாலமுரளி வெளியிட்டுள்ள பதிவில், “ராயன் படத்தில் ஒரு அங்கமாக மாறுவதற்கு வாய்ப்பு கொடுத்த தனுஷுக்கு நன்றி. ஒரு ரசிகையாக உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பிய எனது கனவு நனவான தருணம் இது. நீங்கள் எங்களுடைய இன்ஸ்பிரேஷன். இது நிஜமாகவே ஸ்பெஷல்” என்று கூறியுள்ளார்.