மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ் சினிமாவில் இருந்து விஜய் விலகினால் அவருடைய இடத்தைப் பிடிக்க இங்கு கடுமையான போட்டி இருக்கும். அந்த இடத்தை நோக்கி எப்படியாவது முன்னேற வேண்டும் என சிவகார்த்திகேயன் செயல்பட்டு வருகிறார் என கோலிவுட் வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.
கமல்ஹாசன் தயாரிப்பில் 'அமரன்', ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 23வது படம் ஆகியவை அதற்கு ஒரு சான்று என்றும் சொல்கிறார்கள். இதற்கடுத்து தனது அடுத்தடுத்த படங்களை சிவகார்த்திகேயன் இப்போதே முடிவு செய்துவிட்டாராம்.
சிவகார்த்திகேயனின் 24வது படமாக வெங்கட் பிரபு இயக்க உள்ள படம் உருவாகலாம். அதற்கடுத்து 'டான்' படத்தை இயக்கிய சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம், 'அயலான்' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் என லைன்-அப் உள்ளதாம்.
'டான்' படம் சிவகார்த்திகேயனுக்கு 100 கோடி வசூலைப் பெற்றுத் தந்த ஒரு படம். அதன் இயக்குனர் சிபிசக்கரவர்த்திக்கு கடந்த இரண்டு வருடங்களாக படம் இயக்க வேறு எந்த நாயகனும் கிடைக்கவில்லையாம். அதனால், அவருக்கு வாய்ப்பு என்கிறார்கள்.
'அயலான்' பட வெளியீட்டில் தாமதம் இருந்ததால் அதன் இயக்குனர் ரவிக்குமாருக்கு உறுதியளித்தபடி படம் நடித்துத் தருகிறேன் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்தப் படத்தையும் பிரம்மாண்டமாகவே எடுக்க உள்ளார்களாம். இதற்கான அறிவிப்புகள் படங்கள் ஆரம்பமாகும் போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுமாம்.