300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் மோகன், பூர்ணிமா ஜெயராம், எஸ்வி சேகர், கவுண்டமனி மற்றும் பலர் நடித்து 1982ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி வெளிவந்த படம் 'பயணங்கள் முடிவதில்லை'. இப்படம் வெளிவந்து இன்றுடன் 42 ஆண்டுகள் ஆகிறது.
இளையராஜாவின் இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட். மோகன், பூர்ணிமாவின் காதல் நடிப்பு, கவுண்டமணியின் கலக்கலான காமெடி என அந்தக் காலத்தில் ஆரவாரமான வெற்றியைப் பெற்று 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டது.
இப்படத்தின் மோகனின் நண்பராக எஸ்வி சேகர் நடித்திருந்தார். இப்படம் பற்றிய நினைவுப் பதிவொன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “நானும் மோகனும் பிலிம் சேம்பரில் படம் பார்த்துவிட்டு வந்து பேசும் போது நாலு வாரம் ஒடும் என பேசிக் கொண்டோம். எங்களின் கணிப்பை பொய்யாக்கி 25 வாரங்கள் ஒடிய படம். இன்றும் பேசப்படக்கூடிய ராஜாவின் பாடல்கள் ஒரு முக்கிய காரணம்.
ஆர் சுந்தர்ராஜனின் படைப்பு மிக அருமை. ரூ 15 ஆயிரத்தில், மீதியை தயாரிப்பாளர் கோவைத்தம்பி ரிலீசுக்கு முதல் நாள் கொடுத்தார். நான் காருக்குள் வந்து எண்ணியபோது ரூ1500 அதிகமாக இருந்தது. திரும்பச் சென்று அதை கொடுத்தேன். வாங்க மறுத்தவரிடம் பேசிய பணம் போதும் சார் என்று கொடுத்து விட்டேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் இது. முதல் படமே வெள்ளிவிழா படம் என்பதெல்லாம் அந்தக் காலத்தில் மிகப் பெரிய விஷயம். இளையராஜாவின் இசையில் வந்த பாடல்கள் இன்று வரை இந்தப் படத்தை ரசிகர்களின் நினைவில் நிறுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் காவியக் காதல் படங்களில் இந்தப் படத்திற்கும் ஒரு இடமுண்டு.