ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சைரன் படத்தை அடுத்து பிரதர், சீனி, தக்லைப் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த நிலையில் விரைவில் ஜெயம் ரவி இயக்குனராக அவதாரம் எடுக்க போவதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு தன்னிடமுள்ள மூன்று கதைகளில் ஒரு கதையில் நடிப்பதற்கு யோகி பாபுவிடம் 500 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து விட்டதாக கூறியிருக்கும் ஜெயம் ரவி, மேலும், இரண்டு படங்களை தானே இயக்கி நடிக்க போவதாக கூறியுள்ளார். அதனால் ஜெயம் ரவி இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே தனுஷ் படங்கள் இயக்கி நடித்து வரும் நிலையில், அடுத்து சிம்புவும் ஒரு படத்தை இயக்கி, நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. அதேபோல் விஷாலும் துப்பறிவாளன்- 2 படத்தை இயக்கி நடிக்கப் போகிறார். இவர்கள் வரிசையில் விரைவில் ஜெயம் ரவியும் இணையப்போகிறார்.