மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படம் பற்றிய தகவல் கடந்த வருடம் செப்டம்பர் 25ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியானது. இயக்குனர் ஏஆர் முருகதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து அது தனது 23வது படமாக உருவாகும் என்ற தகவலை சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்தார். அதில் படத் தயாரிப்பாளர் தெலுங்கு தயாரிப்பாளரான என்வி பிரசாத்-தும் கலந்து கொண்டார்.
கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 21வது படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் 23வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், 21வது படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து இழுபறியாக விட்டுவிட்டு நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாத கால படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்கிறார்கள்.
இதனால், பொறுமையிழந்த 23வது படத்தின் தயாரிப்பாளர் என்வி பிரசாத் படத்தை ஆரம்பிக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்தாராம். எனவே, இன்று எந்த முன்னறிவிப்பும் இன்றி படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார்கள்.
இப்படத்தின் மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக முதலில் சொன்னார்கள். ஆனால், இப்போது ருக்மணி வசந்த் கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். இன்றைய படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொண்டார். கன்னட நடிகையான ருக்மணி, விஜய் சேதுபதியின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சல்மான் கான் நடிக்க உள்ள ஹிந்திப் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வந்தன. இந்நிலையில் அவர் சிவகார்த்திகேயனின் படத்தை ஆரம்பித்துள்ளார்.