புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளுக்கு எதிராக பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் நடிகரும், ஒளிப்பதிவாளருமான இளவரசு முறைகேடு புகார் கொடுத்தார். இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, கடந்த டிசம்பர் 12ம் தேதி இரவு இளவரசு விசாரணைக்கு ஆஜரானதாகவும், அவரிடம் வாக்குமூலம் பெற்று, டிசம்பர் 13ம் தேதி கோர்ட்டில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும் போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், அன்றைய தினம் படப்பிடிப்பில் இருந்ததாகவும், விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் இளவரசு கூறினார். ஆனால் அவர் ஆஜரானதற்கான ஆதாரங்களை போலீசார் தாக்கல் செய்ததால், நீதிமன்றத்தில் பொய் தகவலை தெரிவித்த இளவரசு மன்னிப்பு கேட்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இளவரசு கோர்ட்டில் ஆஜரானார். அவர் சார்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இளவரசு கொடுத்த புகாரின் மீது கடந்த 7 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத பாண்டி பஜார் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர்களாக இருந்தவர்கள் ஆஜராக உத்தரவிட்டது நீதிமன்றம்.