புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும் போது, திரையில் இடம் பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம் பெறவில்லை என்று தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு மக்கள் அமைப்பு தமிழக அரசிடன் புகார் அளித்தது. இதை தொடர்ந்து தனுஷ், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சென்னை உயர்நீதி மன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் சைதாப்பேட்டை கோர்ட்டில் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியே. அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்து மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன் மூலம் இந்த பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது.