கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? |
தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கல் ரிலீஸாக திரைக்கு வந்துள்ளது. அடுத்து தனது 50வது படத்தை இயக்கி, நடித்து முடித்துள்ளார். தற்போது ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51வது படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நாகார்ஜூனா நடிக்கின்றார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது.
இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் ஐதராபாத்தில் தொடங்கியதாக இன்று(ஜன., 18) படக்குழு அறிவித்துள்ளனர். இதற்காக தனுஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பே ஐதராபாத்திற்கு சென்றார்.