என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |

“நேரம், பிரேமம், கோல்டு” என மூன்று மலையாளப் படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். “நேரம்” படம் தமிழிலும் தயாரான படம். 'பிரேமம்' மலையாளப் படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்த படம். 'கோல்டு' படம் மலையாளத்திலேயே பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அல்போன்ஸ் புத்ரன் தற்போது 'கிப்ட்' என்ற தமிழ்ப் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு பதிவிட்டு கவனத்தை ஈர்ப்பவர் அல்போன்ஸ் புத்ரன். சமீபத்தில் கூட இனி படங்களை இயக்கப் போவதில்லை என்ற ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும் விஜயகாந்த் மறைவு பற்றியும், முதல்வர், உதயநிதி உள்ளிட்டோருக்கு அச்சுறுத்தல் என சர்ச்சையான கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் இனி சமூக வலைத்தளங்களில் எந்தப் பதிவையும் இடப்போவதில்லை என அறிவித்துள்ளார். “நான் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது எனது அம்மா, அப்பா, சகோதரிகளுக்குப் பிடிக்கவில்லை. சில உறவினர்கள் அவர்களை பயமுறுத்துவதால் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பதிவிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளேன். நான் அமைதியாக இருந்தால் அனைவருக்கும் நிம்மதி கிடைக்கும் என்கிறார்கள். அதனால், அப்படியே செய்ய உள்ளேன், நிறைய பேருக்கு நல்லது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.