துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
“நேரம், பிரேமம், கோல்டு” என மூன்று மலையாளப் படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். “நேரம்” படம் தமிழிலும் தயாரான படம். 'பிரேமம்' மலையாளப் படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்த படம். 'கோல்டு' படம் மலையாளத்திலேயே பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அல்போன்ஸ் புத்ரன் தற்போது 'கிப்ட்' என்ற தமிழ்ப் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு பதிவிட்டு கவனத்தை ஈர்ப்பவர் அல்போன்ஸ் புத்ரன். சமீபத்தில் கூட இனி படங்களை இயக்கப் போவதில்லை என்ற ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும் விஜயகாந்த் மறைவு பற்றியும், முதல்வர், உதயநிதி உள்ளிட்டோருக்கு அச்சுறுத்தல் என சர்ச்சையான கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் இனி சமூக வலைத்தளங்களில் எந்தப் பதிவையும் இடப்போவதில்லை என அறிவித்துள்ளார். “நான் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது எனது அம்மா, அப்பா, சகோதரிகளுக்குப் பிடிக்கவில்லை. சில உறவினர்கள் அவர்களை பயமுறுத்துவதால் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பதிவிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளேன். நான் அமைதியாக இருந்தால் அனைவருக்கும் நிம்மதி கிடைக்கும் என்கிறார்கள். அதனால், அப்படியே செய்ய உள்ளேன், நிறைய பேருக்கு நல்லது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.