அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
“நேரம், பிரேமம், கோல்டு” என மூன்று மலையாளப் படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். “நேரம்” படம் தமிழிலும் தயாரான படம். 'பிரேமம்' மலையாளப் படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்த படம். 'கோல்டு' படம் மலையாளத்திலேயே பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அல்போன்ஸ் புத்ரன் தற்போது 'கிப்ட்' என்ற தமிழ்ப் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு பதிவிட்டு கவனத்தை ஈர்ப்பவர் அல்போன்ஸ் புத்ரன். சமீபத்தில் கூட இனி படங்களை இயக்கப் போவதில்லை என்ற ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும் விஜயகாந்த் மறைவு பற்றியும், முதல்வர், உதயநிதி உள்ளிட்டோருக்கு அச்சுறுத்தல் என சர்ச்சையான கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் இனி சமூக வலைத்தளங்களில் எந்தப் பதிவையும் இடப்போவதில்லை என அறிவித்துள்ளார். “நான் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது எனது அம்மா, அப்பா, சகோதரிகளுக்குப் பிடிக்கவில்லை. சில உறவினர்கள் அவர்களை பயமுறுத்துவதால் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பதிவிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளேன். நான் அமைதியாக இருந்தால் அனைவருக்கும் நிம்மதி கிடைக்கும் என்கிறார்கள். அதனால், அப்படியே செய்ய உள்ளேன், நிறைய பேருக்கு நல்லது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.