பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நடிகர் வடிவேலு ஒரு மிகச் சிறந்த நடிகர் என்ற போதும் தன்னுடன் நடித்த சக நடிகர்களின் இறப்புக்கு கூட செல்லாதவர். இதன் காரணமாகவே தற்போது அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். குறிப்பாக சமீபத்தில் போண்டாமணி, விஜயகாந்த் ஆகியோரின் இறப்புக்கு அவர் செல்லாதது பெரிய அளவில் அவர் மீது அதிருப்தி மனநிலையை உருவாக்கி இருக்கிறது. இத்தனைக்கும் விஜயகாந்த் வீட்டுக்கு அடுத்த தெருவில்தான் வடிவேலுவின் வீடு உள்ளது.
இந்த நிலையில், வடிவேலுவுடன் சில படங்களில் நடித்துள்ள காமெடியன் பெஞ்சமின் கூறுகையில், ‛‛போண்டா மணி, நான் உள்ளிட்ட பல நடிகர்கள் மக்களின் கவனத்திற்கு வந்தது வடிவேலுவால்தான். காரணம் உண்மையிலேயே அவர் ஒரு பிறவிக் கலைஞன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனபோதிலும் அவர் ஒரு நல்ல மனிதர் கிடையாது. குறிப்பாக படப்பிடிப்பு தளங்களில் நாங்கள் எல்லாம் சாப்பாடு கிடைக்காமல் திண்டாடினால் கூட அது குறித்து வடிவேலு ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டார். நாங்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு ரோட்டில் நின்றால் கூட அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவர் ஜாலியாக கேரவனில் அமர்ந்திருப்பார். அதேசமயம், கேப்டன் விஜயகாந்த் போன்ற நடிகர்கள் சக நடிகர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பான்மை கொண்டவர்கள். விஜயகாந்த்தை பொருத்தவரை தனது யூனிட்டில் அனைவரையும் சாப்பிட வைத்து அழகு பார்க்கக் கூடியவர். யார் மனதும் நோகும்படி நடந்து கொள்ள மாட்டார் என்று பெஞ்சமின் கூறி உள்ளார்.