கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கேப்டன் மில்லர். இந்த படம் வருகிற 12ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தற்போது அருண் மாதேஸ்வரன் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛கேப்டன் மில்லர் படத்தின் ரிலீசுக்கு பிறகு ஒரு படத்தை தயாரித்து, ஒளிப்பதிவு செய்து இயக்க உள்ளேன். அந்த படத்தை 15 நாட்களில் முடிப்பதற்கும் திட்டமிட்டுள்ளேன். அதன்பிறகு மீண்டும் தனுஷ் நடிப்பில் ஒரு சரித்திர படத்தை இயக்கப்போகிறேன். அந்த படத்தை தனுஷே தயாரித்து நடிக்க இருக்கிறார். அதன்பிறகு ஜகமே தந்திரம் படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் அருண் மாதேஸ்வரன். அந்த வகையில், கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு அடுத்தடுத்து மூன்று படங்களை அவர் இயக்கப் போகிறார்.