ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171 வது படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தை அடுத்து மாரி செல்வராஜ், நெல்சன் ஆகியோர் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து ரஜினி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. மாமன்னன் படத்திற்கு பிறகு ரஜினியை சந்தித்து மாரி செல்வராஜ் ஒரு கதை சொல்லியிருப்பதாக கூறப்படும் அதேவேளையில், ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை ரஜினியை சந்தித்து நெல்சன் கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. என்றாலும் இது குறித்து ரஜினி தரப்பில் இருந்தோ, சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் தரப்பிலிருந்தோ எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.