சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை |
ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171 வது படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தை அடுத்து மாரி செல்வராஜ், நெல்சன் ஆகியோர் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து ரஜினி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. மாமன்னன் படத்திற்கு பிறகு ரஜினியை சந்தித்து மாரி செல்வராஜ் ஒரு கதை சொல்லியிருப்பதாக கூறப்படும் அதேவேளையில், ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை ரஜினியை சந்தித்து நெல்சன் கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. என்றாலும் இது குறித்து ரஜினி தரப்பில் இருந்தோ, சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் தரப்பிலிருந்தோ எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.