சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த வாரம் மறைந்த போது அவருக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவும் பல முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்களில் சிலர் வெளிநாடுகளில் இருந்தனர். வருட இறுதி நாட்கள், புத்தாண்டு என குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தார்கள். அதனால், வர இயலவில்லை என்ற தகவல் வெளியானது.
தற்போது ஒவ்வொருவராக வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சரத்குமார், சசிகுமார், சிவகுமார், கார்த்தி ஆகியோர் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கடந்த இரண்டு நாட்களில் அஞ்சலி செலுத்தினர். வெளிநாட்டிலிருந்து மும்பை திரும்பிய சூர்யா, இன்று சென்னைக்கு வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் மாலை அணிவித்தும், சமாதி முன்பு அமர்ந்து சில நிமிடங்கள் அமர்ந்தும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
பத்திரிகையாளர்களிடம் அழுது கொண்டே பேசுகையில் விஜயகாந்துடன் இணைந்து 'பெரியண்ணா' படத்தில் நடித்த நாட்களை நினைவு கூர்ந்தார். ‛‛அண்ணனைப் போல யாரும் இல்லை. இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாமல் போனது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் மறைந்தாலும் எப்போதும் அவரின் நினைவு இருக்கும்'' என்றார்.
அதன்பின்பு சூர்யா, கார்த்தி அவர்களது அப்பா சிவக்குமார் ஆகியோர் விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று அங்கு அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.