திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தமிழ் திரையுலகில் தனது வசீகரமான வசனத்தால் மக்களை சிந்திக்க வைத்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில், அனைத்து திரையுலக சங்கங்களும் இணைந்து வரும் ஜன.,6ல் (நாளை மறுநாள்) சென்னையில் கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கோலாகலமாக கொண்டாடுகிறது.
இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, சாமிநாதன், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள், தெலுங்கில் இருந்து சிரஞ்சீவி, வெங்கடேஷ், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், கன்னடத்தில் சிவராஜ்குமார் மற்றும் ஹிந்தியில் முன்னணி நட்சத்திரங்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.
சுமார் ஆறு மணிநேரம் நடைபெற இருக்கும் இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கருணாநிதியின் வசனம், பாடல்களில் இருந்து பல புதுமையான காட்சி அமைப்புகள், கருணாநிதியின் ஆவண படங்கள் என பல நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.