'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேரி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது | சூரி படத்துக்கு ஓடிடி-யில் இழுபறி |
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். தமிழ்த் திரையுலகில் ஏழிசை மன்னராகத் திகழ்ந்தவர். இவரின் 'பவளக்கொடி, ஹரிதாஸ்' போன்ற படங்கள் எல்லாம் ஆண்டு கணக்கில் தியேட்டர்களில் ஓடின. 1959ல் மறைந்த இவருக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.
இவர்களில் மகன் ரவீந்திரனும், மகள் சரோஜாவும் ஏற்கனவே காலமாகிவிட்ட நிலையில் தற்போது இன்னொரு மகளான சுசீலாவும்(89) காலமானார். சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வந்த சுசீலா வயதுமூப்பால் வரும் உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் மறைந்தார். இவருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.