இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
எம்.ஜி.ஆர் ஆக்ஷன் ஹீரோவாக வளர்ந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அப்போதைய சண்டை இயக்குனர் சோமு. எம்.ஜி.ஆருக்கு வாள் சண்டை கற்றுக் கொடுத்தவர். அவரது மகன் எஸ்.எஸ்.கோபால். அப்பாவிடம் உதவியாளராக பணியாற்றி வந்த கோபால் பின்னர் ஜூனியர் சோமு என்ற பெயரில் தனியாக படங்களில் பணியாற்றினார். ‛‛வருங்கால தூண்கள், வலது காலை எடுத்து வைத்து வா, கொலுசு, அண்ணன் காட்டிய வழி'' உள்ளிட்ட ஏராளமான படங்களில் சண்டை இயக்குனராக பணியாற்றினார்.
கோடம்பாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த 81 வயதான கோபால் வயது மூப்பின் காரணமாக பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார். கோபாலுக்கு வசந்தா என்ற மனைவியும் ஆக்ஷன் பிரகாஷ், சுப்ரீம் சுந்தர், ராஜசேகர் என 3 மகன்களும் உள்ளனர். மூவருமே சண்டை இயக்குனர்களாக பணியாற்றி வருகிறார்கள்.