மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஏஐ தொழில் நுட்பத்தில் பேசிய வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பார்த்திபன். அதில், ஏஐ பார்த்திபன் பேசும்போது, கேயார் அவர்கள் என் மீதும், என் சினிமா ஏதும் மிகுந்த அக்கறை கொண்டவர். அவரது சமீபத்திய படமான ஆயிரம் பொற்காசுகள் படத்திற்கு புதிய யுக்தியை பயன்படுத்தி இருக்கிறார். அதாவது, ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்றும் அவர் அறிவித்துள்ளார். முதல் நாளில் பெருவாரியான ரசிகர்கள் இந்த படத்தை காண வேண்டும் என்பதால் அவர் இப்படி ஒரு ஐடியாவை செய்திருக்கிறார்.
இந்த விளம்பரத்தை பார்க்கும்போது எனக்கு சரிகமபதநி படத்திற்காக நான் ஒட்டிய ஐம்பதாவது நாள் போஸ்டரில், அப்பாடா என்று எழுதியதும், அதன்பின் கே.பாலசந்தர் அவர்கள் என்னை பாராட்டி ஏழு பக்கங்களில் கடிதம் எழுதியதும் ஞாபகத்துக்கு வந்தது. சின்ன பட்ஜெட் படங்கள் மக்களை சென்றடைய என்னவெல்லாம் செய்ய வேண்டும். ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எப்படி எல்லாம் பாடுபட வேண்டும் என்ற வலி அந்த அறிவிப்பில் உள்ளது என்ற வருத்தம் இருந்தாலும், இது போன்ற யுக்தி மூலம் மக்களை நல்ல படங்கள் சென்றடைய ஒரு காரணமாக இருக்கும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார் பார்த்திபன். ஏஐ டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்ட பார்த்திபன் பேசும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.