கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். அவரது அப்பா சுரேஷ் மலையாளத்தில் பிரபல தயாரிப்பாளர். நிறைய படங்களைத் தயாரித்துள்ளார்.
சமீபத்தில் கேரளாவில் நடந்த சர்வதேச புத்தக விழா ஒன்றில் அவர் பேசிய போது மலையாளத்தில் மம்முட்டி நடித்த 'ரோமாஞ்சனம்' மற்றும் தமிழில் விஜய் நடித்து வெற்றி பெற்ற 'லியோ' படங்களைப் பற்றி இளம் சினிமா ரசிகர்களிடம் பேசினார்.
“உங்களின் மைன்ட் செட் மாறிவிட்டது. நீங்கள் லோகேஷ் கனகராஜையும், நெல்சனையும் பாலோ செய்கிறீர்கள். 'ரோமாஞ்சனம்' சினிமாவும் எனக்கு சிறந்த படமாக தோணவில்லை. அந்தப் படம் மோசமான படம் என நான் சொல்லவில்லை, ஆனால், எனக்குப் பிடிக்கவில்லை. அதெல்லாம் உங்களுக்குப் பிடிக்கும். நான் ஒரு பழைய ஆள். இப்போது யாராவது என்னிடம் வந்து கதை சொன்னாலும் அது எனக்கு குழப்பமாக இருக்கும். எனது மகளைக் கேட்கச் சொல்வேன். இங்கு தமிழ் சினிமாவுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளார்கள்.
சமீபத்தில் 'லியோ' படம் பார்த்தேன். அது எனக்கு பெரிய படமாகத் தோன்றவில்லை. கிளைமாக்ஸ்ல 200 பேரை ஹீரோ அடிக்கிற சம்பவத்தை சூப்பர் மேன் தான் பண்ண முடியும். ஆனால், அது உங்களுக்குப் பிடிச்சிருக்கு,” என அவர் மனதில் பட்டதை யதார்த்தமாகப் பேசியிருந்தார்.
இருப்பினும் அவர் எப்படி 'லியோ' படத்தைக் குறை சொல்லலாம் என விஜய் ரசிகர்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். விஜய்யுடன் ஜோடி சேர்ந்து 'சர்க்கார், பைரவா' படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் அப்பா இப்படி பேசியிருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
'லியோ' படத்திற்கே இப்படி விமர்சித்திருக்கிறாரே அவரது மகள் நடித்த 'பைரவா' படத்தை அவர் பார்க்கவில்லையோ என்ற கேள்வியும் கூடவே வருகிறது.