மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேறி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 68 வது படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருபவர் சித்தார்த் நுனி. இவர் சமீபத்தில் ஐதராபாத்தில் அனிமல் ஹிந்தி படத்தை பார்த்ததாகவும், அதை பார்த்ததும், தான் அதிர்ச்சி அடைந்து விட்டதாகவும் சோசியல் மீடியாவில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். மேலும், இந்த அனிமல் படத்தை பார்த்ததும் எனக்கு எந்தவித இன்ஸ்பிரேசனும் ஏற்படவில்லை. ஆணாதிக்க மனநிலை ஆபாசத்தின் உச்சமாக இருக்கிறது. அதோடு இப்படத்தின் கடைசி காட்சியில் மனைவியை பலாத்காரம் செய்யும் காட்சி அசிங்கமாக இருக்கிறது. என்னதான் இப்படம் வசூலில் சாதனை செய்தாலும் இது ஒரு மோசமான படம். அதோடு இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்ட பிறகும் குழந்தைகளுடன் அனைவரும் படம் பார்க்க தியேட்டருக்கு செல்வது கஷ்டமாக இருக்கிறது. எந்த ஒரு சமூக அக்கறையும் இல்லாத இந்த படத்தை பார்ப்பதற்கு எப்படி குழந்தைகளை அனுமதிக்கிறார்கள் என்றும் தனது ஆதங்கத்தை வெளியிட்டு இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த் நுனி.