என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 68 வது படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருபவர் சித்தார்த் நுனி. இவர் சமீபத்தில் ஐதராபாத்தில் அனிமல் ஹிந்தி படத்தை பார்த்ததாகவும், அதை பார்த்ததும், தான் அதிர்ச்சி அடைந்து விட்டதாகவும் சோசியல் மீடியாவில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். மேலும், இந்த அனிமல் படத்தை பார்த்ததும் எனக்கு எந்தவித இன்ஸ்பிரேசனும் ஏற்படவில்லை. ஆணாதிக்க மனநிலை ஆபாசத்தின் உச்சமாக இருக்கிறது. அதோடு இப்படத்தின் கடைசி காட்சியில் மனைவியை பலாத்காரம் செய்யும் காட்சி அசிங்கமாக இருக்கிறது. என்னதான் இப்படம் வசூலில் சாதனை செய்தாலும் இது ஒரு மோசமான படம். அதோடு இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்ட பிறகும் குழந்தைகளுடன் அனைவரும் படம் பார்க்க தியேட்டருக்கு செல்வது கஷ்டமாக இருக்கிறது. எந்த ஒரு சமூக அக்கறையும் இல்லாத இந்த படத்தை பார்ப்பதற்கு எப்படி குழந்தைகளை அனுமதிக்கிறார்கள் என்றும் தனது ஆதங்கத்தை வெளியிட்டு இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த் நுனி.