‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 68 வது படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருபவர் சித்தார்த் நுனி. இவர் சமீபத்தில் ஐதராபாத்தில் அனிமல் ஹிந்தி படத்தை பார்த்ததாகவும், அதை பார்த்ததும், தான் அதிர்ச்சி அடைந்து விட்டதாகவும் சோசியல் மீடியாவில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். மேலும், இந்த அனிமல் படத்தை பார்த்ததும் எனக்கு எந்தவித இன்ஸ்பிரேசனும் ஏற்படவில்லை. ஆணாதிக்க மனநிலை ஆபாசத்தின் உச்சமாக இருக்கிறது. அதோடு இப்படத்தின் கடைசி காட்சியில் மனைவியை பலாத்காரம் செய்யும் காட்சி அசிங்கமாக இருக்கிறது. என்னதான் இப்படம் வசூலில் சாதனை செய்தாலும் இது ஒரு மோசமான படம். அதோடு இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்ட பிறகும் குழந்தைகளுடன் அனைவரும் படம் பார்க்க தியேட்டருக்கு செல்வது கஷ்டமாக இருக்கிறது. எந்த ஒரு சமூக அக்கறையும் இல்லாத இந்த படத்தை பார்ப்பதற்கு எப்படி குழந்தைகளை அனுமதிக்கிறார்கள் என்றும் தனது ஆதங்கத்தை வெளியிட்டு இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த் நுனி.




