டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் |

மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கணேசன் இணைந்து தயாரித்துள்ள படம், 'வட்டார வழக்கு'. சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, வெங்கடேசன், விசித்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படம் பற்றி இயக்குநரும், தயாரிப்பாளருமான கண்ணுச்சாமி ராமச்சந்திரன் கூறியதாவது:
இது 1985-ல் நடப்பது போன்ற கதையைக் கொண்ட படம். உறவினர்களுக்குள் நடக்கும் பிரச்னையை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. ஒரு வட்டாரத்தில் நடக்கும் வழக்கை இந்தப் படம் பேசுவதால் 'வட்டார வழக்கு' என்று தலைப்பு வைத்துள்ளோம். மதுரை மேற்கு பகுதியில் உள்ள கிராமத்துப் பின்னணியில் படம் உருவாகி இருக்கிறது. படம் உண்மைக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். கதையும் உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது.
இது பங்காளிகளுக்குள் நடக்கும் பிரச்னையை மையமாகக் கொண்ட படம். 40 வருடங்களுக்கு முன் கிராமங்களில் இருந்த கலப்படமில்லாத காதல், பகை, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத மனிதர்களைப் பற்றிய கதையை ரத்தமும் சதையுமாகச் சொல்லி இருக்கிறேன். பிளாஷ்பேக் காட்சி 1960-களில் நடப்பது போல வரும். அதற்காக, பழமையான கிராமத்தைத் தேட கஷ்டப்பட்டோம். கடைசியில் கல்லுப்பட்டியில் எதிர்பார்த்த இடம் கிடைத்தது. அங்கு படமாக்கினோம். வருகிற 29ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. என்றார்.