இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
புதுமுகங்கள் உருவாக்கி உள்ள படம் 'பாய்'. நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா, வில்லனாக தீரஜ்கெர் நடித்துள்ளனர். கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதிலிருந்தே சர்ச்சை கிளம்பியது. காரணம் 'பாய்' என்ற டைட்டிலுக்கு கீழ் 'சிலீப்பர் செல்' என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
அதில் சர்ச்சைக்கு விளக்கம் அளித்து அதன் இயக்குனர் பேசியதாவது: பாய் என்றால் சகோதரன் மட்டுமல்ல நண்பன் என்றும் சொல்லலாம். படத்தின் முதல் பாதியில் கேள்விகளாகவும் இரண்டாவது பாதியில் அதற்குரிய பதில்களாகவும் வரும்படி இந்த திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் எந்த மதத்தையும் புண்படுத்தவில்லை. மனிதநேயம் தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையானது என்கிற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதை குறிக்கும் விதமாகத்தான் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது. படம் பற்றி பலருக்கு சந்தேகம் இருக்கும். படம் வெளிவரும்போது அனைத்து தரப்பினரும் வரவேற்கும் படமாக இருக்கும். என்றார்.