மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' |
நடிகை த்ரிஷாவை ஆபாசமாக பேசியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. த்ரிஷாவுக்கு ஆதரவாக குஷ்பு, சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் குரல் கொடுத்தனர். இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்டார் மன்சூர் அலிகான். இதை த்ரிஷாவும் ஏற்றுக் கொண்டார்.
இந்த பிரச்னை இதோடு முடியும் என்றும் பார்த்தால் தன் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் மீது சென்னை, ஐகோர்ட்டில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார் மன்சூர் அலிகான். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
மன்சூர் அலிகான், தொடர்ச்சியாக சர்ச்சை செயல்களில் ஈடுபடுகிறார். எந்த தவறும் செய்யவில்லை என தற்போது கூறும் அவர், கைது நடவடிக்கைகளில் தப்பிக்கவா மன்னிப்பு கோரினார்? இந்த விஷயத்தில் த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அவருக்கு அறிவுறுத்துங்கள் என நீதிபதி கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி த்ரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 22ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.