ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
நடிகை த்ரிஷாவை ஆபாசமாக பேசியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. த்ரிஷாவுக்கு ஆதரவாக குஷ்பு, சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் குரல் கொடுத்தனர். இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்டார் மன்சூர் அலிகான். இதை த்ரிஷாவும் ஏற்றுக் கொண்டார்.
இந்த பிரச்னை இதோடு முடியும் என்றும் பார்த்தால் தன் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் மீது சென்னை, ஐகோர்ட்டில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார் மன்சூர் அலிகான். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
மன்சூர் அலிகான், தொடர்ச்சியாக சர்ச்சை செயல்களில் ஈடுபடுகிறார். எந்த தவறும் செய்யவில்லை என தற்போது கூறும் அவர், கைது நடவடிக்கைகளில் தப்பிக்கவா மன்னிப்பு கோரினார்? இந்த விஷயத்தில் த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அவருக்கு அறிவுறுத்துங்கள் என நீதிபதி கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி த்ரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 22ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.