‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் | ரூ.60 கோடி பண மோசடி : நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு | என் இதயம் நொறுங்கிவிட்டது : நாய்களுக்காக கண்ணீர் விட்டு கதறிய நடிகை சதா | தர்ஷனுக்கு வழங்கிய ஜாமின் ரத்து : சுப்ரீம் கோர்ட் உத்தரவு | அரங்கம் அதிர, விசிலு பறக்க... வெளியானது கூலி : ரசிகர்கள் கொண்டாட்டம் | ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் |
நடிகை த்ரிஷாவை ஆபாசமாக பேசியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. த்ரிஷாவுக்கு ஆதரவாக குஷ்பு, சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் குரல் கொடுத்தனர். இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்டார் மன்சூர் அலிகான். இதை த்ரிஷாவும் ஏற்றுக் கொண்டார்.
இந்த பிரச்னை இதோடு முடியும் என்றும் பார்த்தால் தன் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் மீது சென்னை, ஐகோர்ட்டில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார் மன்சூர் அலிகான். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
மன்சூர் அலிகான், தொடர்ச்சியாக சர்ச்சை செயல்களில் ஈடுபடுகிறார். எந்த தவறும் செய்யவில்லை என தற்போது கூறும் அவர், கைது நடவடிக்கைகளில் தப்பிக்கவா மன்னிப்பு கோரினார்? இந்த விஷயத்தில் த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அவருக்கு அறிவுறுத்துங்கள் என நீதிபதி கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி த்ரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 22ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.