தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் | கதை நாயகியான லிஸி ஆண்டனி | முகமூடி அணிந்து ரசிகர்களிடம் நேரடியாக பட விமர்சனம் கேட்ட அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : கன்னட நாடகத் துறையின் புரட்சியாளர் | பிளாஷ்பேக் : என்ஜினீயர் மோகன், கிரேஸி மோகன் ஆனது எப்படி? | காஜல் அகர்வால் இயக்குனர் ஆகிறாரா? | த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? |
மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக தமிழ் திரையுலகம் சார்பில் டிச., 24ல் பிரமாண்ட விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னெடுத்த இந்த நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த தமிழ் சினிமா சங்கமும் ஒன்று கூடி உள்ளது. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பங்கேற்க இருந்தனர். அவர்களுக்கான அழைப்பும் கொடுக்கப்பட்டது. மேலும் பன்மொழியில் இருந்தும் முக்கிய கலைஞர்கள் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தமாதம் நடக்கும் என தெரிகிறது. தற்போது சென்னையில் பெய்த பெரு வெள்ளம் பாதிப்பால் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்படுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.