பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நடிகை சமந்தா இந்த வருடத்திலேயே இரண்டு படங்கள் ஒரு வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்துவிட்டு அடுத்ததாக செலெக்ட்டிவ்வான படங்களை மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார். மீதி நாட்களில் வெளிநாட்டு சுற்றுலா, நண்பர்களுடன் பயணம் என ஜாலியாக பொழுது போக்கி வருகிறார். சமீபத்தில் ஐதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் குழந்தைகள் பள்ளிக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார் சமந்தா.
அன்று விளையாட்டு தினம் என்பதால் போட்டிகளில் கலந்து கொண்ட குழந்தைகள் அனைவரையும் கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தி விளையாட செய்தார். குழந்தைகளும் பதிலுக்கு சமந்தாவிற்கு தங்கள் அன்பையும் வரவேற்பையும் தெரிவித்தன. இந்த நிகழ்வில் கலந்து கொண்டது குறித்து சமந்தா கூறும்போது, 'ஒரு புத்தகம், ஒரு பேனா, ஒரு குழந்தை மற்றும் ஓர் ஆசிரியர்.. இந்த உலகத்தையே மாற்றிவிட முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.