ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த படம் 'புஷ்பா'. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படமாகி வருகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுனின் நண்பன் கேஷவா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஜகதீஷ். முதல் பாகத்திலும் நடித்துள்ளார், இரண்டாம் பாகத்திலும் அவருக்கு படம் முழுவதும் வரும் கதாபாத்திரமாம்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஜகதீஷ் தலைமறைவாகி இருந்தார். ஜுனியர்நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பின்தான் அவர் தலைமறைவாகி இருக்கிறார். அப்பெண்ணின் தந்தை தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்ததைத் தொடர்ந்து பஞ்சகுட்டா போலீசார் ஜகதீஷைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சக நடிகை ஒருவரது தற்கொலைக்கு ஒரு நடிகரே காரணமாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நடிகையை ஜகதீஷ் கொடுமைப்படுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக நடிகையின் அப்பா குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார்.