திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? | ஏஆர் முருகதாஸை வறுத்தெடுத்த சல்மான் கான் | காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! |
சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான பப்லு பிரித்விராஜ் தன்னை விட முப்பது வயது குறைந்த ஷீத்தல் என்பவருடன் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் அறிவித்திருந்தனர். அடிக்கடி சோஷியல் மீடியாவில் ஜோடியாக புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர்.
ஆனால், தற்போது பப்லு மற்றும் ஷீத்தல் இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராமில் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கியுள்ளனர். இதனால் இருவரும் பிரிந்துவிட்டனரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. மேலும், ஷீத்தல் வெளியிட்ட மற்றொரு வீடியோவில் ரசிகர் ஒருவர் இருவருக்கும் ப்ரேக்கப்பா? என்று நேரடியாக கேட்க ஷீத்தல் அதற்கு பதில் எதுவும் கூறாமல் அதற்கு லைக் மட்டும் போட்டுள்ளார். இதனால் இருவரும் பிரிந்துவிட்டது உறுதியாகிறது.