ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
'மீ டூ' என்ற விவகாரம் வந்த பிறகு பல நடிகைகள் அவர்களது வாழ்க்கையில் நடந்த சில பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி வெளிப்படையாக பேச ஆரம்பித்தார்கள். ஆனால், இன்னமும் சிலர் பேசத் தயங்கி வருகிறார்கள்.
'பிக் பாஸ் சீசன் 7' நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நடிகை விசித்ரா சில தினங்களுக்கு முன்பு ஒரு காலத்தில் தெலுங்குப் படம் ஒன்றில் அவருக்கு நேர்ந்த சில துரத்தல்கள், தொல்லைகள், அடிகள் பற்றி உணர்வுபூர்வமாகப் பேசியிருந்தார்.
அவர் நடித்த படத்தின் கதாநாயகன் அவரை படுக்கையறைக்கு அழைத்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார். படத்தின் பெயர், கதாநாயகன் யார் என அவர் குறிப்பிட்டுப் பேசவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் அந்த நடிகர் பாலகிருஷ்ணா, அந்தப் படம் 'பலேவடிவி பாசு' என்ற தெலுங்குப் படம் என எழுதி வருகிறார்கள்.
இதனால், கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம்தான் விஸ்வரூபமெடுத்துள்ளது. ஆனால், விசித்ரா குற்றச்சாட்டுக்கு தமிழ் சினிமாவிலிருந்து இதுவரை யாரும் ஆதரவுக் குரல் கொடுக்கவில்லை.
சமீபத்தில் த்ரிஷா பற்றி மன்சூரலிகான் பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து அவர் தற்போது போலீஸ் விசாரணை வரை சென்றுள்ளார். விசித்ரா விவகாரத்திற்கு 'மீ டூ'விற்காகக் குரல் கொடுத்து தமிழ் சினிமாவின் பெண் பிரபலங்களாவது குரல் கொடுப்பார்களா ?.