மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மறைந்த தமிழ் நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா ஏற்கனவே தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது முரளியின் இளைய மகன் மற்றும் அதர்வா-வின் தம்பி ஆகாஷ் முதல் முறையாக தமிழில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை அவரின் மாமா மற்றும் நடிகர் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதனால் ஆகாஷ் தனது அடுத்த படத்திற்கான கதை கேட்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் பிரபல இயக்குனர் லிங்குசாமி ஆகாஷ்-ன் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பையா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்பது கூடுதல் தகவல்.