மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
லவ் டூடே படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற பிறகு பிரதீப் ரங்கநாதன் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதனை முதலில் கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் தயாரிக்கின்றார்.
இதில் பிரதீப் ரங்கநாதன் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கின்றார் என ஏற்கனவே வெளியான தகவலைத் தொடர்ந்து இப்போது மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் மிஷ்கின் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், பிரதீப் ரங்கநாதன் என மூன்று இயக்குனர்களை ஒரே படத்தில் வைத்து விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.