புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ரஜினிக்கு சமீபகாலமாக கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பல நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் ரஜினியை சந்தித்து வருகிறார்கள். சமீபத்தில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தார். தொடர் வெற்றிகளை குவித்து வரும் இந்தியா இன்று அரையிறுதி போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகிறது. இது இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும். இதில் தோற்றால் இதுவரை பெற்ற வெற்றிகள் பயனில்லாமல் போகும்.
இதனால் இந்த போட்டியை இந்திய ரசிகர்கள் பரபரப்புடன் எதிர்பார்க்கிறார்கள். இந்த நிலையில் இந்த போட்டியை காண நேற்று இரவு ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் மும்பை புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவரது பயணம் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு “கிரிக்கெட் விளையாட்டை பார்க்க போகிறேன்” என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்றார்.
நள்ளிரவில் மும்பை விமான நிலையத்தில் இறங்கிய ரஜினி அங்கிருந்து தான் தங்கும் ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். இன்று மதியம் 2 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டியை ரஜினி பார்க்கிறார். போட்டி முடிந்ததும் இன்று மாலையே அவர் சென்னை திரும்ப திட்டமிட்டிருக்கிறார்.