மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ரஜினிக்கு சமீபகாலமாக கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பல நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் ரஜினியை சந்தித்து வருகிறார்கள். சமீபத்தில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தார். தொடர் வெற்றிகளை குவித்து வரும் இந்தியா இன்று அரையிறுதி போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகிறது. இது இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும். இதில் தோற்றால் இதுவரை பெற்ற வெற்றிகள் பயனில்லாமல் போகும்.
இதனால் இந்த போட்டியை இந்திய ரசிகர்கள் பரபரப்புடன் எதிர்பார்க்கிறார்கள். இந்த நிலையில் இந்த போட்டியை காண நேற்று இரவு ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் மும்பை புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவரது பயணம் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு “கிரிக்கெட் விளையாட்டை பார்க்க போகிறேன்” என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்றார்.
நள்ளிரவில் மும்பை விமான நிலையத்தில் இறங்கிய ரஜினி அங்கிருந்து தான் தங்கும் ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். இன்று மதியம் 2 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டியை ரஜினி பார்க்கிறார். போட்டி முடிந்ததும் இன்று மாலையே அவர் சென்னை திரும்ப திட்டமிட்டிருக்கிறார்.