39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு |
தீபாவளி வந்த பின் அடுத்த இரண்டு வாரங்களுக்கு முக்கியமான படங்களை வெளியிட மாட்டார்கள். தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் எப்படியாவது இரண்டு வாரங்களாவது தாக்குப் பிடித்து ஓடிவிடும் என்ற நம்பிக்கைதான் அதற்குக் காரணம். தீபாவளிக்கு வெளியான நான்கு படங்களில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் மட்டும் எப்படியாவது இரண்டு வாரத்தைத் தொட்டுவிடும் என எதிர்பார்க்கிறார்கள்.
இந்த வார வெள்ளிக்கிழமையான நவம்பர் 17ம் தேதி முக்கிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இரண்டு சிறிய படங்கள் மட்டும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாஷிகா ஆனந்த், அவிதேஜ் ரெட்டி நடித்துள்ள 'சைத்ரா' படமும், 'அம்புநாடு ஒம்பது குப்பம்' படமும் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களின் அறிவிப்பைத் தவிர வேறு படங்களின் அறிவிப்பு வரவில்லை.
அதே சமயம் நவம்பர் 24ம் தேதி, டிசம்பர் 1ம் தேதிகளில் சில முக்கிய படங்கள் வெளியாக உள்ளன.