இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
1978ம் ஆண்டு இன்றைய முன்னணி சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டிருந்த காலம். இருவரும் தனித் தனி ஹீரோக்களாக நடிப்போம் என பேசி வைத்துக் கொண்டு நடிக்க ஆரம்பித்த காலம்.
1978ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கமல்ஹாசன் நடித்த 'சிகப்பு ரோஜாக்கள்', ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த 'அவள் அப்படித்தான்', ரஜினிகாந்த் நடித்த 'தாய் மீது சத்தியம், தப்புத் தாளங்கள்', தெலுங்கு நடிகர் முரளி மோகன், ஸ்ரீதேவி நடித்த 'மனிதரில் இத்தனை நிறங்களா', விஜயகுமார் நடித்த 'தங்கரங்கன்', ஜெமினி கணேசன், சுஜாதா, ஸ்ரீப்ரியா, முத்துராமன் நடித்த 'ஸ்ரீ காஞ்சி காமாட்சி', சிவகுமார், லதா நடித்த 'கண்ணாமூச்சி', சிவாஜி கணேசன் நடித்த 'பைலட் பிரேம்நாத்', ஜெய்சங்கர் நடித்த 'வண்டிக்காரன் மகன்', நாகேஷ் நடித்த 'அதிர்ஷ்டக்காரன்', என 11 படங்கள் ஓரிரு நாள் முன்னும், பின்னுமாக வெளிவந்தன. 'மனிதரில் இத்தனை நிறங்களா, தப்புத் தாளங்கள்' ஆகிய படங்களில் கமல்ஹாசன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இத்தனை படங்களில் வசூல் ரீதியாக வெற்றி பெற்று ரஜினியையும், கமலையும் தனி கதாநாயகனாக அந்தஸ்துக்கு 'தாய் மீது சத்தியம், சிகப்பு ரோஜாக்கள்' ஆகிய படங்கள் அமைந்தன. சிவாஜி கணேசன், ஜெய் சங்கர் இருவரும் அப்போது முன்னணி ஹீரோக்கள். அவர்களது படங்களை விடவும் ரஜினி, கமல் இருவரும் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்கள். இருப்பினும் ரஜினி நடித்த 'தப்புத் தாளங்கள்', ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடித்த 'அவள் அப்படித்தான்' படங்களுக்கு பாராட்டுக்கள் கிடைத்த அளவிற்கு வசூல் கிடைக்கவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக தீபாவளிக்கு ஓரிரு படங்கள் மட்டுமே வெளிவருவதையும், 45 வருடங்களுக்கு முன்பு 11 படங்கள் வந்ததையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ் சினிமா எவ்வளவு மாறிவிட்டது என்பது ரசிகர்களுக்குப் புரியும்.