வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
பள்ளி பருவத்தில் வருவது காதல் அல்ல, அது இன கவர்ச்சி எனவே பள்ளி மாணவர்கள் காதலிப்பது போன்றும், டூயட் பாடுவது போன்றும் படங்களில் காட்சி வைக்க கூடாது என்று பொதுவான கருத்து உள்ளது. ஆனால் அதையும் மீறி அவ்வப்போது பள்ளி பருவ காதல் படங்கள் வெளிவரத்தான் செய்கிறது. சமீபத்தில் வெளிவந்த 'மார்கழி திங்கள்' படத்திலும் பள்ளி பருவ காதல்தான் கதை களமாக இருந்தது.
தற்போது ஆதிராஜன் இயக்கி வரும் நினைவெல்லாம் நீயடா படமும் பள்ளி பருவ காதலை களமாக கொண்டிருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கிறார்கள். லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்த படத்தில் பிரஜன் கதாநாயகனாக நடிக்கிறார், கதாநாயகியாக மனீஷா யாதவ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, அபிநட்சத்திரா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் ஆதிராஜன் கூறியதாவது : பள்ளிப் பருவத்தில் உருவாகும் முதல் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு 5 பாடல்களை இசைத்துக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. பழனி பாரதி பாடலை எழுத, கார்த்தி பாடியுள்ளார். தீனா நடன வடிவமைப்பில் உருவான இந்த பாடல் காட்சியில் பள்ளி மாணவ மாணவிகளாக நடிக்கும் ரோகித், யுவலட்சுமி ஜோடி நடித்துள்ளனர். என்கிறார் ஆதிராஜன்.