தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சூரரைப்போற்று படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சூர்யாவின் 43 வது படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கும் ஜி.வி பிரகாஷ் குமார் தான் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ஜோமான் டி ஜான் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார். இந்த தகவலை அவரே தனது சோசியல் மீடியா பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
மலையாளத்தில் சார்லி, என்னு நிண்டே மொய்தீன் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றிய ஜோமான் டி ஜான் தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன், தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான பாவ கதைகள் என்கிற ஆந்தாலஜி படத்தில் சுதா கொங்கரா இயக்கிய தங்கம் குறும்படத்திற்கு இவர்தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அதைத்தொடர்ந்து தற்போது சூர்யாவின் 43 வது படத்திலும் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார். அது மட்டுமல்ல பிரபல பாலிவுட் இயக்குனர் ரோகித் ஷெட்டியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக கடந்த சில வருடங்களில் வெளியான சிம்பா, சூரியவன்சி, சர்க்கஸ் ஆகிய படங்களிலும் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.