ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” |
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினிகாந்த். தற்போது ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புக்காக மும்பையில் உள்ளார். இதில் அமிதாப் பச்சன் நடிப்பதால் 33 ஆண்டுகள் கழித்து அவருடன் நடிக்கும் மகிழ்ச்சியை அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, மகிழ்ச்சியை பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் அரசியல் மற்றும் திரைத்துறையை சார்ந்த பல பிரபலங்கள் பங்கேற்றனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதா கிருஷ்ணன், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, சகோதரி செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மூத்த நடிகை லதா, மீனா, நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
விருந்தினர்களை ரஜினியின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.