ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினிகாந்த். தற்போது ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புக்காக மும்பையில் உள்ளார். இதில் அமிதாப் பச்சன் நடிப்பதால் 33 ஆண்டுகள் கழித்து அவருடன் நடிக்கும் மகிழ்ச்சியை அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, மகிழ்ச்சியை பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் அரசியல் மற்றும் திரைத்துறையை சார்ந்த பல பிரபலங்கள் பங்கேற்றனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதா கிருஷ்ணன், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, சகோதரி செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மூத்த நடிகை லதா, மீனா, நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
விருந்தினர்களை ரஜினியின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.