காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 170 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம், நெல்லை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் நடந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பில் ரஜினி - அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகிறது. இதற்காக நேற்று ரஜினி 170 வது படத்தின் படக்குழு மும்பை புறப்பட்டு சென்றது. அப்போது மும்பை விமான நிலையத்தில் ரஜினியை கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் சந்தித்துள்ளார். ரஜினியுடன் இணைந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இர்பான், இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினி மிகவும் எளிமையான மனிதராக உள்ளார். அவருடனான இந்த சந்திப்பு எனக்கு சில படிப்பினையை தந்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார். இவர் தமிழில் விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.