இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
விஜய் நடிப்பில் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள படம். இப்படத்திற்கு அக்டோபர் 19 முதல் 24ம் தேதி வரை தினமும் 5 காட்சிகள் நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. முதலில் வெளியிட்ட ஆணையில் எத்தனை மணிக்கு முதல் காட்சியை ஆரம்பிக்கலாம், எத்தனை மணிக்கு முடிக்கலாம் என்பது குறித்து எதுவும் சொல்லவில்லை.
இதனால், சில தியேட்டர்களில் காலை 8 மணி காட்சிக்கே முதல் காட்சியை நடத்துவதாக முன்பதிவை ஆரம்பித்தனர். இந்நிலையில் நேற்று அரசு தரப்பில் மீண்டும் புதிய ஆணை ஒன்றை வெளியிட்டார்கள். அதன்படி காலை 9 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவில் 1.30 மணிக்குள் அந்த 5 காட்சிகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள். இவற்றை மீறுகிறார்களா என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கண்காணிக்கவும் அறிவுறுத்தியிருந்தார்கள்.
நேற்று மாலை வெளியான அந்த ஆணையைத் தொடர்ந்து ஆன்லைன் முன்பதிவு இணையதளங்களில் காலை காட்சி 9 மணிக்கு என்பதை உடனடியாக மாற்றினார்கள். இருப்பினும் கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள சில தியேட்டர்களில் இன்னும் காலை காட்சி 8 மணி என்பதை மாற்றாமல் இருக்கிறார்கள். அத்தியேட்டர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரியவில்லை.